• May 12 2024

மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பு மாணவி சாதனை...!குவியும் பாராட்டுக்கள்...!samugammedia

Sharmi / Dec 8th 2023, 2:55 pm
image

Advertisement

மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய  தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3 ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர்பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற தமிழ்செல்வன் அக்ஷதா சர்வதேச மனக்கணக்கு போட்டியில் தெரிவு செய்யப்பட்டார். 



இந்த சர்வதேச போட்டி கடந்த 3ம் திகதி மலேசியாவில் 80 க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்துகொண்ட போது 6 வயதுடைய அக்ஷதா போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். 

செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும்  குறித்த மாணவியின் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.



மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பு மாணவி சாதனை.குவியும் பாராட்டுக்கள்.samugammedia மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய  தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3 ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர்பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற தமிழ்செல்வன் அக்ஷதா சர்வதேச மனக்கணக்கு போட்டியில் தெரிவு செய்யப்பட்டார். இந்த சர்வதேச போட்டி கடந்த 3ம் திகதி மலேசியாவில் 80 க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்துகொண்ட போது 6 வயதுடைய அக்ஷதா போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும்  குறித்த மாணவியின் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement