நாட்டின் பல பாகங்களிலும் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில், பெய்துவரும் கன மழை காரணமாக திருகோணமலை -தோப்பூர் பிரதேசத்தில் உள்ள சுமார் 20 வீடுகளுக்குள் மழைநீர் உட்புகுந்துள்ளதுடன் வீடுகளின் வளாகத்தினுள்ளும் மழைநீர் உட்புகுந்துள்ளது.
அதேவேளை வீதிகள் சிலவும் மழைநீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
இதனால் இவ் வீதிகள் ஊடாக பயணிக்கும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இடம்பெயர்வுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.