• May 18 2024

இசை நிகழ்ச்சியில் கொடூரம் - சிறுவன் குத்தி கொலை ..! அதிகாலையில் பரபரப்பு சம்பவம்

Chithra / May 5th 2024, 8:07 am
image

Advertisement


களுத்துறை - பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் 

இக் கொடூர சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த இசை நிகழ்ச்சியில் இருவருக்கு  இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பழம் வெட்டும் கத்தியால் குறித்த சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, பரத்த வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடக்கு  பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


இசை நிகழ்ச்சியில் கொடூரம் - சிறுவன் குத்தி கொலை . அதிகாலையில் பரபரப்பு சம்பவம் களுத்துறை - பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் இக் கொடூர சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.குறித்த இசை நிகழ்ச்சியில் இருவருக்கு  இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பழம் வெட்டும் கத்தியால் குறித்த சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.பாணந்துறை, பரத்த வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடக்கு  பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement