• Nov 22 2025

திருமண நாளன்று மணமகள் விபத்தில் சிக்கி படுகாயம் -அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்து தாலி கட்டிய மணமகன்!

dileesiya / Nov 22nd 2025, 5:40 pm
image

மருத்துவமனை அவசரபிரிவு அறையில் படுக்கையில் இருந்த மணப்பெண்ணின்  கழுத்தில், மணமகன்  தாலி கட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கேரளாவில், திருமணம் நடக்கவிருந்த நாளன்று மணமகள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததால், மணமக்களின் திருமணம் மருத்துவமனையின், அவசரபிரிவு அறையில் அவசர கதியில் எளிமையாக நடந்தது.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கொம்மாடியைச் சேர்ந்த அவனி என்ற இளம்பெண்ணுக்கும், தும்போலையைச் சேர்ந்த ஷரோன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தும்போலி என்ற இடத்தில் நேற்று மதியம் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை, மணமக்களின் வீட்டார் செய்தனர்.

உற்றார், உறவினர்களும் திருமணத்தில் பங்கேற்க தயராகினர்.

இந்நிலையில், திருமணத்துக்கு முன் அலங்காரம் செய்து கொள்வதற்காக மணமகள் அவனி, நேற்று அதிகாலை சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது.

இந்நிலையிலே ,முகூர்த்த நேரம் நெருங்கியதால், அந்த நேரத்திற்குள் திருமணத்தை நடத்த வேண்டும் என இரு வீட்டாரும் மணமகனிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, மருத்துவமனையில் எளிமையாக திருமணம் நடத்த அனுமதி கோரப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அங்கிருந்த அவசரப்பிரிவு அறையில் படுக்கையில் இருந்த அவனி கழுத்தில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் ஷரோன் தாலி கட்டினார். 

மணமக்களை இரு வீட்டாரும் ஆசீர்வதித்தனர். மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தம்பதியினருக்கு  வாழ்த்துகளை தெரிவித்தனர்.


திருமண நாளன்று மணமகள் விபத்தில் சிக்கி படுகாயம் -அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்து தாலி கட்டிய மணமகன் மருத்துவமனை அவசரபிரிவு அறையில் படுக்கையில் இருந்த மணப்பெண்ணின்  கழுத்தில், மணமகன்  தாலி கட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.கேரளாவில், திருமணம் நடக்கவிருந்த நாளன்று மணமகள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததால், மணமக்களின் திருமணம் மருத்துவமனையின், அவசரபிரிவு அறையில் அவசர கதியில் எளிமையாக நடந்தது.கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கொம்மாடியைச் சேர்ந்த அவனி என்ற இளம்பெண்ணுக்கும், தும்போலையைச் சேர்ந்த ஷரோன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.தும்போலி என்ற இடத்தில் நேற்று மதியம் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை, மணமக்களின் வீட்டார் செய்தனர். உற்றார், உறவினர்களும் திருமணத்தில் பங்கேற்க தயராகினர்.இந்நிலையில், திருமணத்துக்கு முன் அலங்காரம் செய்து கொள்வதற்காக மணமகள் அவனி, நேற்று அதிகாலை சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது.இந்நிலையிலே ,முகூர்த்த நேரம் நெருங்கியதால், அந்த நேரத்திற்குள் திருமணத்தை நடத்த வேண்டும் என இரு வீட்டாரும் மணமகனிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, மருத்துவமனையில் எளிமையாக திருமணம் நடத்த அனுமதி கோரப்பட்டது.மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அங்கிருந்த அவசரப்பிரிவு அறையில் படுக்கையில் இருந்த அவனி கழுத்தில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் ஷரோன் தாலி கட்டினார். மணமக்களை இரு வீட்டாரும் ஆசீர்வதித்தனர். மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தம்பதியினருக்கு  வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement