• May 17 2024

இரு பெண்களுடன் நிர்வாணக் கோலத்தில் பௌத்த பிக்கு : பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு! samugammedia

Tamil nila / Jul 8th 2023, 4:28 pm
image

Advertisement

நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும்,  இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பிற்கு அண்மையில் உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவரும், இரு பெண்களையும் நிர்வாண நிலைக்கு உட்படுத்தி அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பிக்கு மற்றும் உடன் இருந்த இருவரை தாக்கியவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டத்தை எவரும் கையில் எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இருப்பினும்   குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரு பெண்களுடன் நிர்வாணக் கோலத்தில் பௌத்த பிக்கு : பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு samugammedia நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும்,  இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.கொழும்பிற்கு அண்மையில் உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவரும், இரு பெண்களையும் நிர்வாண நிலைக்கு உட்படுத்தி அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்நிலையில் இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பிக்கு மற்றும் உடன் இருந்த இருவரை தாக்கியவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.சட்டத்தை எவரும் கையில் எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.இருப்பினும்   குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement