• Sep 20 2024

கோர விபத்தில் சிக்கிய பேருந்து - வயோதிபர் உயிரிழப்பு..! 8 பேர் கவலைக்கிடம்..! பலர் காயம் samugammedia

Chithra / Oct 20th 2023, 2:11 pm
image

Advertisement

 

பதுளை - மொரஹெல பிரதான வீதியில் உல்பாத ஹண்டி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான  பேருந்து விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.   

குறித்த பேருந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.   

மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீகஹகிவுல பிரதேசத்தில் இன்று (20) வாராந்த சந்தை நடைபெறவுள்ளதால் பெருமளவான மக்கள் பேருந்தில் பயணித்துள்ளனர் என தெரியவருகின்றது.

 

கோர விபத்தில் சிக்கிய பேருந்து - வயோதிபர் உயிரிழப்பு. 8 பேர் கவலைக்கிடம். பலர் காயம் samugammedia  பதுளை - மொரஹெல பிரதான வீதியில் உல்பாத ஹண்டி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான  பேருந்து விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.   குறித்த பேருந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.   மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.மீகஹகிவுல பிரதேசத்தில் இன்று (20) வாராந்த சந்தை நடைபெறவுள்ளதால் பெருமளவான மக்கள் பேருந்தில் பயணித்துள்ளனர் என தெரியவருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement