• Apr 28 2024

யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் சேவை நேரத்தில் மாற்றம்...! பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு...!

Sharmi / Mar 29th 2024, 8:47 pm
image

Advertisement

யாழ் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு,  மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  த.சத்தியமூர்த்தி  தெரிவித்துள்ளார்.

இன்று(29) மாலை யாழ் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தீர்மானங்களை அறிவித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில்  சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள்.

அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த  கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆளணி எமக்குள்ள ஒரு பாரிய சவாலாக விளங்குகிறது.

இருந்த போதும் எம்மிடம்  காணப்படுகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி  சேவையாற்றி வருகின்றோம்.

எமது தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்துள்ளோம்.

அவர் எமது தேவைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்திற்கு,  யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  யாழ் போதனா வைத்திய சாலையின் அபிவிருத்தி குழு தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை,  யாழ் போதனா  வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா,  வைத்தியசாலை கணக்காளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் சேவை நேரத்தில் மாற்றம். பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு. யாழ் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு,  மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  த.சத்தியமூர்த்தி  தெரிவித்துள்ளார்.இன்று(29) மாலை யாழ் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தீர்மானங்களை அறிவித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில்  சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள்.அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த  கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.அதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆளணி எமக்குள்ள ஒரு பாரிய சவாலாக விளங்குகிறது.இருந்த போதும் எம்மிடம்  காணப்படுகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி  சேவையாற்றி வருகின்றோம்.எமது தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்துள்ளோம். அவர் எமது தேவைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.குறித்த கூட்டத்திற்கு,  யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  யாழ் போதனா வைத்திய சாலையின் அபிவிருத்தி குழு தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை,  யாழ் போதனா  வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா,  வைத்தியசாலை கணக்காளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement