• Sep 29 2024

மாகாண நிர்வாகத்தில் மாற்றங்கள்..! ஜனாதிபதி அதிரடி samugammedia

Chithra / Jul 9th 2023, 1:35 pm
image

Advertisement

மாகாண சபைகளின் கீழிருந்த அமைச்சுப் பொறுப்புகளை அதே அதிகாரத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலைந்துள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் இப்போது மாகாண ஆளுநர்களின் கீழ் இருக்கின்றன.

ஆனால், மாகாணத்தில் அபிவிருத்தி செயற்பாடுகள் பின்னடைவில் இருப்பதாக பல தரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மாகாண அதிகாரங்களைப் பகிர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதன்படி முதலமைச்சர் தவிர்ந்த 4 அமைச்சுப் பொறுப்புகளைக் கொண்டிருக்கும் மாகாண சபையின் அதிகாரங்களை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண அமைச்சரின் அதே அதிகாரம் இந்த எம்.பிக்களுக்கு வழங்கப்படுவதுடன் மாகாண ரீதியாக செய்யப்படும் வேலைத் திட்டங்களை இவர்கள் ஆளுநரின் ஒப்புதலுடன் மத்திய அரசுடன் இணைந்து அமுல்படுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.

மாகாண மேற்பார்வை குழு என்ற கட்டமைப்பின் கீழ் அமுலாகவுள்ள இந்த செயற்றிட்டம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை ஜனாதிபதி கோரியுள்ளதாக தெரியவருகிறது.

மாகாண நிர்வாகத்தில் மாற்றங்கள். ஜனாதிபதி அதிரடி samugammedia மாகாண சபைகளின் கீழிருந்த அமைச்சுப் பொறுப்புகளை அதே அதிகாரத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கலைந்துள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் இப்போது மாகாண ஆளுநர்களின் கீழ் இருக்கின்றன.ஆனால், மாகாணத்தில் அபிவிருத்தி செயற்பாடுகள் பின்னடைவில் இருப்பதாக பல தரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மாகாண அதிகாரங்களைப் பகிர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.இதன்படி முதலமைச்சர் தவிர்ந்த 4 அமைச்சுப் பொறுப்புகளைக் கொண்டிருக்கும் மாகாண சபையின் அதிகாரங்களை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மாகாண அமைச்சரின் அதே அதிகாரம் இந்த எம்.பிக்களுக்கு வழங்கப்படுவதுடன் மாகாண ரீதியாக செய்யப்படும் வேலைத் திட்டங்களை இவர்கள் ஆளுநரின் ஒப்புதலுடன் மத்திய அரசுடன் இணைந்து அமுல்படுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.மாகாண மேற்பார்வை குழு என்ற கட்டமைப்பின் கீழ் அமுலாகவுள்ள இந்த செயற்றிட்டம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை ஜனாதிபதி கோரியுள்ளதாக தெரியவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement