தாய்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மியன்மார் மற்றும் லாவோஸுக்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை அழைத்துச் சென்று மனிதக் கடத்தலில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவர் பத்தரமுல்லை பிரதேசத்தில் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
59 வயதான சீன பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் கணினி தரவு உள்ளீடு மற்றும் வாடிக்கையாளர் சேவை நிறுவனங்களில் வேலை வழங்குவதாக தெரிவித்த இலங்கையர்கள் பலரிடமிருந்து பல கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு இந்த மனித கடத்தலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி மனிதக் கடத்தல் - இலங்கையில் சிக்கிய சீனப் பிரஜை. samugammedia தாய்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மியன்மார் மற்றும் லாவோஸுக்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை அழைத்துச் சென்று மனிதக் கடத்தலில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவர் பத்தரமுல்லை பிரதேசத்தில் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.59 வயதான சீன பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.தாய்லாந்தில் கணினி தரவு உள்ளீடு மற்றும் வாடிக்கையாளர் சேவை நிறுவனங்களில் வேலை வழங்குவதாக தெரிவித்த இலங்கையர்கள் பலரிடமிருந்து பல கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு இந்த மனித கடத்தலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.