• Mar 01 2025

கிறிஸ்தவப் பாட ஆசிரியருக்கு இடமாற்றம்; மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

Sharmi / Feb 28th 2025, 4:28 pm
image

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கு கிறிஸ்த மாணவர்களும்,அவர்களது பெற்றோர்களும் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்றையதினம்(27) முறைப்பாடொன்றை பதிவு செய்தனர்.

வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் சுமார் 45 கிறிஸ்தவ மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் இருந்த ஒரேயொரு கிறிஸ்தவப் பாட ஆசிரியர் கடந்த 25 ஆம் திகதி இடமாற்றம் வழங்கப்பட்டு வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனால் கிறிஸ்தவ மாணவர்கள் கிறிஸ்தவப் பாடத்தை கற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு தமது உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இவர்கள் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று மனுவொன்றை கையளித்துள்ளனர்.

இதன்போது மீண்டும் அந்த ஆசிரியரை தமது பாடசாலைக்கு நியமித்து தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 





கிறிஸ்தவப் பாட ஆசிரியருக்கு இடமாற்றம்; மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு. திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கு கிறிஸ்த மாணவர்களும்,அவர்களது பெற்றோர்களும் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்றையதினம்(27) முறைப்பாடொன்றை பதிவு செய்தனர்.வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் சுமார் 45 கிறிஸ்தவ மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் இருந்த ஒரேயொரு கிறிஸ்தவப் பாட ஆசிரியர் கடந்த 25 ஆம் திகதி இடமாற்றம் வழங்கப்பட்டு வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதனால் கிறிஸ்தவ மாணவர்கள் கிறிஸ்தவப் பாடத்தை கற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு தமது உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இவர்கள் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று மனுவொன்றை கையளித்துள்ளனர்.இதன்போது மீண்டும் அந்த ஆசிரியரை தமது பாடசாலைக்கு நியமித்து தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement