தூய்மை பணியாளராக பணியாற்றிய ஒருவரது தோலுக்கு அடியில் புழுக்கள் நெளியும் அரிய வகை நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயின் நாட்டில் கிராமபுறத்தில் வசித்து வரும் 64 வயது முதியவர் ஒருவருக்கே இந்த வினோத நோய் ஏற்பட்டுள்ளது.
குறித்த முதியவரிற்கு கடந்த சில தினங்களாக லேசான வயிற்றுப் போக்கும் அரிப்புத்தன்மையும் இருந்ததுடன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மருத்துவமனையில் அனுமதித்து அவரை பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை அவர் ஒரு வித ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது.
மருத்துவர்கள் அவருடைய தோலில் நெளியும் புழுக்களின் வடிவத்தை ஸ்கெட்ச் மூலம் வெளியே வரைந்துள்ளனர்.
அந்த நபருக்கு ஒட்டுண்ணிக்கு எதிரான மருந்துகள் கொடுக்கப்பட்டமையால் அந்த மருந்துகளும் அவருக்கு சிறப்பாக செயலாற்றியுள்ளதாகவும் இதனால் அவருக்கு இருந்த வயிற்றுப்போக்கும், ஆங்காங்கே சிவப்பாக இருத்த அடையாளங்களும் குறைந்துள்ளது.
அவருக்கு தூய்மை பணியின் போது அசுத்தமான குப்பையிலிருந்து இந்த ஒட்டுண்ணி தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
தோலுக்குள் ஊடுருவும் இந்த புழுக்கள் மனித தோலுக்குள் ஊடுருவி குடலை அடைவதுடன் அவை முதிர்ச்சி அடைந்தவுடன் குடலில் முட்டையை உற்பத்தி செய்யும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த புழுக்கள் செப்சிஸ் நோயையும் உறுப்பு செயலிழப்பையும் ஏற்படுத்தும் எனவும் சில சமயங்களில் கவனிக்காமல் விட்டால் உயிரிழக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளரிற்கு ஏற்பட்ட வினோத நோய்-வாயடைத்து போன மருத்துவர்கள்samugammedia தூய்மை பணியாளராக பணியாற்றிய ஒருவரது தோலுக்கு அடியில் புழுக்கள் நெளியும் அரிய வகை நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்பெயின் நாட்டில் கிராமபுறத்தில் வசித்து வரும் 64 வயது முதியவர் ஒருவருக்கே இந்த வினோத நோய் ஏற்பட்டுள்ளது. குறித்த முதியவரிற்கு கடந்த சில தினங்களாக லேசான வயிற்றுப் போக்கும் அரிப்புத்தன்மையும் இருந்ததுடன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதித்து அவரை பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை அவர் ஒரு வித ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது. மருத்துவர்கள் அவருடைய தோலில் நெளியும் புழுக்களின் வடிவத்தை ஸ்கெட்ச் மூலம் வெளியே வரைந்துள்ளனர். அந்த நபருக்கு ஒட்டுண்ணிக்கு எதிரான மருந்துகள் கொடுக்கப்பட்டமையால் அந்த மருந்துகளும் அவருக்கு சிறப்பாக செயலாற்றியுள்ளதாகவும் இதனால் அவருக்கு இருந்த வயிற்றுப்போக்கும், ஆங்காங்கே சிவப்பாக இருத்த அடையாளங்களும் குறைந்துள்ளது.அவருக்கு தூய்மை பணியின் போது அசுத்தமான குப்பையிலிருந்து இந்த ஒட்டுண்ணி தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. தோலுக்குள் ஊடுருவும் இந்த புழுக்கள் மனித தோலுக்குள் ஊடுருவி குடலை அடைவதுடன் அவை முதிர்ச்சி அடைந்தவுடன் குடலில் முட்டையை உற்பத்தி செய்யும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புழுக்கள் செப்சிஸ் நோயையும் உறுப்பு செயலிழப்பையும் ஏற்படுத்தும் எனவும் சில சமயங்களில் கவனிக்காமல் விட்டால் உயிரிழக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.