• May 18 2024

நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபட முன்வாருங்கள்...! எதிர் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு...!samugammedia

Sharmi / Feb 7th 2024, 1:55 pm
image

Advertisement

நாட்டின் முன்னேற்றத்திற்காக பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர் கட்சிகளிடம் அழைப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை இன்று (07) ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

இந்தச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பல தசாப்தங்களாக என்னை விமர்ச்சித்தவர்களே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளனர்.

நாட்டின் நன்மைக்காகவும், இளையோரின் எதிர்காலத்திற்காகவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாளானவர்கள் பழைய பகையை மறந்துவிட்டு ஒன்றுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் என்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள். நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களும் உள்ளனர். 

நாட்டுக்கான பொது பயணத்தில் இணைந்துகொள்ள பொதுஜன பெரமுனவால் முடியுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியால் அதனை செய்ய முடியாதிருப்பது ஏன்?

மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எம்முடன் நெருக்கமாக செயற்பட்டது.  ஊழல் ஒழிப்பு பிரிவின் அலுவலகத்திற்கு ஆனந்த விஜயபாலவின் பெயர்   பரிந்துரை செய்யப்பட்டது.    அவ்வாறிருக்க நாட்டின் பொது முன்னேற்றத்திற்கான பயணத்தில் இணைய முடியாதிருப்பது ஏன்?

இந்தச் சபையில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளன. எனினும், நாட்டிற்காக இந்தக் கட்சிகளுக்கு பொதுப் பயணத்தில் ஏன் இணைந்துகொள்ள முடியாது.

நாம் தேர்தலில் வெவ்வேறாக போட்டியிடுவோம்.  ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்துகொள்வோம்.

அதனால் நாட்டை முன்னேற்ற பொது நிலைப்பாட்டுடன் - பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வாருங்கள் என மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.

மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம்.  எமது மனங்களைத் திருத்திக்கொள்வோம். எமக்கு நாமே ஔியாவோம்.  நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்.  தனிப்பட்ட நோக்கங்களுக்காக அன்றி  நாட்டின் பொதுக் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம்.  அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்.  எம்மீது சாட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவோம். 

பல்வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இந்த பொறுப்புக்களைப் புறக்கணித்தால் வரலாற்றில் நாம் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவோம் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபட முன்வாருங்கள். எதிர் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு.samugammedia நாட்டின் முன்னேற்றத்திற்காக பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர் கட்சிகளிடம் அழைப்பு அழைப்பு விடுத்துள்ளார்.ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை இன்று (07) ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,இந்தச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பல தசாப்தங்களாக என்னை விமர்ச்சித்தவர்களே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளனர். நாட்டின் நன்மைக்காகவும், இளையோரின் எதிர்காலத்திற்காகவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாளானவர்கள் பழைய பகையை மறந்துவிட்டு ஒன்றுபட்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் என்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள். நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களும் உள்ளனர்.  நாட்டுக்கான பொது பயணத்தில் இணைந்துகொள்ள பொதுஜன பெரமுனவால் முடியுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியால் அதனை செய்ய முடியாதிருப்பது ஏன்மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எம்முடன் நெருக்கமாக செயற்பட்டது.  ஊழல் ஒழிப்பு பிரிவின் அலுவலகத்திற்கு ஆனந்த விஜயபாலவின் பெயர்   பரிந்துரை செய்யப்பட்டது.    அவ்வாறிருக்க நாட்டின் பொது முன்னேற்றத்திற்கான பயணத்தில் இணைய முடியாதிருப்பது ஏன்இந்தச் சபையில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளன. எனினும், நாட்டிற்காக இந்தக் கட்சிகளுக்கு பொதுப் பயணத்தில் ஏன் இணைந்துகொள்ள முடியாது.நாம் தேர்தலில் வெவ்வேறாக போட்டியிடுவோம்.  ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்துகொள்வோம்.அதனால் நாட்டை முன்னேற்ற பொது நிலைப்பாட்டுடன் - பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வாருங்கள் என மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம்.  எமது மனங்களைத் திருத்திக்கொள்வோம். எமக்கு நாமே ஔியாவோம்.  நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்.  தனிப்பட்ட நோக்கங்களுக்காக அன்றி  நாட்டின் பொதுக் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம்.  அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்.  எம்மீது சாட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவோம்.  பல்வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இந்த பொறுப்புக்களைப் புறக்கணித்தால் வரலாற்றில் நாம் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement