கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
பாடசாலை பொருட்கள் மற்றும் பலவகையான இனிப்புகள் நிரப்பப்பட்ட போலி அடிப்பாகம் கொண்ட சூட்கேஸ்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருள் இவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு பிக்குவும் தங்களது பயணப் பைகளில் ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை எடுத்துவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுசரணையாளர் ஒருவர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி, இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 அன்று பாங்காக்கிற்குப் பயணம் செய்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.
சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைபேசி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை என்றும், அங்கு துறவிகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்றும் விவரிக்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் எனக் கூறப்படும் சந்தேக நபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கட்டுநாயக்காவில் பரபரப்பு - பெருந்தொகை போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் கைது கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. பாடசாலை பொருட்கள் மற்றும் பலவகையான இனிப்புகள் நிரப்பப்பட்ட போலி அடிப்பாகம் கொண்ட சூட்கேஸ்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருள் இவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒவ்வொரு பிக்குவும் தங்களது பயணப் பைகளில் ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை எடுத்துவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுசரணையாளர் ஒருவர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி, இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 அன்று பாங்காக்கிற்குப் பயணம் செய்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைபேசி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை என்றும், அங்கு துறவிகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்றும் விவரிக்கப்படுகிறது.நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் எனக் கூறப்படும் சந்தேக நபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.