• May 17 2024

இலங்கையில் மீண்டும் ஆணுறைத் திட்டம்..! வெளியான தகவல் samugammedia

Chithra / Nov 30th 2023, 8:21 am
image

Advertisement

 

பயணத்தின் இடையே மக்கள் ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் தொடங்கப்படும் என்று தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி வித்யாபத்திரன தெரிவித்துள்ளார்.

2017 முதல், இந்த ஆணுறை விற்பனை இயந்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நிறுவப்பட்டன.

ஆனால், கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அதனை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், கடந்த வாரம் 20 லட்சம் ஆணுறைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சிகிச்சைகளுக்கு வரும் மக்களுக்கு இந்தக் கருத்தடை உறைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் மீண்டும் ஆணுறைத் திட்டம். வெளியான தகவல் samugammedia  பயணத்தின் இடையே மக்கள் ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் தொடங்கப்படும் என்று தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி வித்யாபத்திரன தெரிவித்துள்ளார்.2017 முதல், இந்த ஆணுறை விற்பனை இயந்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நிறுவப்பட்டன.ஆனால், கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அதனை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், கடந்த வாரம் 20 லட்சம் ஆணுறைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.அதன்படி, சிகிச்சைகளுக்கு வரும் மக்களுக்கு இந்தக் கருத்தடை உறைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement