• Oct 13 2024

புதிய ஜனநாயக முன்னணி கட்சிக்குள் வெடித்த மோதல்; ரணில் - தினேஸ் தலைமையில் நாளை விசேட பேச்சுவார்த்தை

Chithra / Oct 13th 2024, 1:26 pm
image

Advertisement


பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்து பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பிரதான கட்சிகள் அவதானம் செலுத்தி வருகின்றன. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி பிரசாரம் உட்பட ஏனைய காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை  கூடவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 

நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இதன் போது பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் மற்றும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

 தேசிய அரசியலில் தாம் மூன்றாவது இடத்தில் இருப்பதால் பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதை விட பலமான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பது புதிய ஜனநாயக முன்னணியின் பெரும்பாலான வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின்  நிலைப்பாடாக உள்ளது.

எவ்வாறிருப்பினும் பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிருத்தி பிரசாரங்களை முன்னெடுக்காமல், எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரைக் களமிறக்கினால் அது தமக்கு எதிர்மறையான ஒரு நிலைவரத்தை ஏற்படுத்தும் என்றும்,  எனவே பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது பிரிதொரு தரப்பின் நிலைப்பாடாக உள்ளது.

அதற்கமைய தினேஸ் குணவர்தனவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கவும் அந்த தரப்பு முன்மொழிந்துள்ளது. 

இது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. 

எவ்வாறிருப்பினும் நாளைய கலந்துரையாடலில் இது தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சிக்குள் வெடித்த மோதல்; ரணில் - தினேஸ் தலைமையில் நாளை விசேட பேச்சுவார்த்தை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்து பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பிரதான கட்சிகள் அவதானம் செலுத்தி வருகின்றன. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி பிரசாரம் உட்பட ஏனைய காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை  கூடவுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் போது பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் மற்றும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. தேசிய அரசியலில் தாம் மூன்றாவது இடத்தில் இருப்பதால் பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதை விட பலமான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பது புதிய ஜனநாயக முன்னணியின் பெரும்பாலான வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின்  நிலைப்பாடாக உள்ளது.எவ்வாறிருப்பினும் பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிருத்தி பிரசாரங்களை முன்னெடுக்காமல், எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரைக் களமிறக்கினால் அது தமக்கு எதிர்மறையான ஒரு நிலைவரத்தை ஏற்படுத்தும் என்றும்,  எனவே பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது பிரிதொரு தரப்பின் நிலைப்பாடாக உள்ளது.அதற்கமைய தினேஸ் குணவர்தனவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கவும் அந்த தரப்பு முன்மொழிந்துள்ளது. இது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறிருப்பினும் நாளைய கலந்துரையாடலில் இது தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement