• May 18 2024

தமிழரசு கட்சிக்குள் மீண்டும் குழப்பம்..! இன்று இடம்பெறவிருந்த கூட்டம் திடீரென ஒத்திவைப்பு..!samugammedia

Sharmi / Jun 19th 2023, 9:51 am
image

Advertisement

ஜனாதிபதியுடன் இடம் பெற்ற பேச்சு மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் இடம்பெறவிருந்த தமிழரசு கட்சியின் உயர்பீடக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் கட்சியின் பெருந் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த  நிலையிலே  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடையிலான சந்திப்பு செயலகத்தில் இடம்பெற்றது.

அதில், அரசியல் தீர்வு மற்றும் காணி அபகரிப்பு போன்ற தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டது.

இவ்வாறான நிலையில், மீண்டும் ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சந்தித்து ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சு மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு தீர்மானித்திருந்தனர்.

எனினும், இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் எம்.பி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சிக்குள் மீண்டும் குழப்பம். இன்று இடம்பெறவிருந்த கூட்டம் திடீரென ஒத்திவைப்பு.samugammedia ஜனாதிபதியுடன் இடம் பெற்ற பேச்சு மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் இடம்பெறவிருந்த தமிழரசு கட்சியின் உயர்பீடக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் கட்சியின் பெருந் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த  நிலையிலே  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடையிலான சந்திப்பு செயலகத்தில் இடம்பெற்றது. அதில், அரசியல் தீர்வு மற்றும் காணி அபகரிப்பு போன்ற தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டது. இவ்வாறான நிலையில், மீண்டும் ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சந்தித்து ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சு மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு தீர்மானித்திருந்தனர். எனினும், இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் எம்.பி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement