பிட்டிபனவிலுள்ள பெளத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு அரசாங்கம் மறைமுகமாக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (27) பத்தரமுல்லை, இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தை போலீசார் எதிர்த்த போது மாணவர்களுக்கும் போலீசார்க்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.