• May 09 2024

தொடரும் 'யுக்திய' நடவடிக்கை...! 779 சந்தேகநபர்கள் கைது...!

Sharmi / Mar 9th 2024, 3:29 pm
image

Advertisement

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில்  பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு  நடவடிக்கைகளில் 779 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 620 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 159 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 779 சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 270 கிராம் 997 மில்லி கிராம் ஹெராயின், 230 கிராம் பனி 748 மி.கி, கஞ்சா 2 கிலோ 764 கிராம், மாவா 92 கிராம் 520 மி.கி, துலே 14 கிராம் 040 மி.கி, மதன மோதக 37 கிராம், 413  மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 620 சந்தேக நபர்களில் 07 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 06 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 18 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.




தொடரும் 'யுக்திய' நடவடிக்கை. 779 சந்தேகநபர்கள் கைது. நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில்  பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு  நடவடிக்கைகளில் 779 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 620 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 159 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 779 சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 270 கிராம் 997 மில்லி கிராம் ஹெராயின், 230 கிராம் பனி 748 மி.கி, கஞ்சா 2 கிலோ 764 கிராம், மாவா 92 கிராம் 520 மி.கி, துலே 14 கிராம் 040 மி.கி, மதன மோதக 37 கிராம், 413  மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 620 சந்தேக நபர்களில் 07 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 06 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 18 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement