• May 18 2024

தொடரும் 'யுக்திய' நடவடிக்கை...! 730 சந்தேக நபர்கள் கைது...!

Sharmi / Feb 27th 2024, 10:21 am
image

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையில் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 526 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 204 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 730 சந்தேக நபர்கள்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 154 கிராம் 267 மில்லி கிராம் ஹெரோயின், பனி 81 கிராம் 485 மி.கி,  கஞ்சா 15 கிலோ 140 கிராம்,  மாவா 314 கிராம் 230 மி.கி, மதன மோதக 209 கிராம்,  840 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள 526 சந்தேக நபர்களில் 04 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான  சந்தேகநபர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப்பிரிவுகளில் கைது செய்யப்பட்ட 204 சந்தேக நபர்களில் 17 சந்தேகநபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 174 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 11 சந்தேகநபர்கள் குற்றங்களுக்காகவும், 02 சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





தொடரும் 'யுக்திய' நடவடிக்கை. 730 சந்தேக நபர்கள் கைது. கடந்த 24 மணி நேரத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையில் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 526 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 204 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 730 சந்தேக நபர்கள்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, 154 கிராம் 267 மில்லி கிராம் ஹெரோயின், பனி 81 கிராம் 485 மி.கி,  கஞ்சா 15 கிலோ 140 கிராம்,  மாவா 314 கிராம் 230 மி.கி, மதன மோதக 209 கிராம்,  840 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள 526 சந்தேக நபர்களில் 04 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான  சந்தேகநபர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், குற்றப்பிரிவுகளில் கைது செய்யப்பட்ட 204 சந்தேக நபர்களில் 17 சந்தேகநபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 174 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 11 சந்தேகநபர்கள் குற்றங்களுக்காகவும், 02 சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement