சபைக் கூட்டத்தின் இறுதியில் சலுபாலி எனப்படும் சாந்தி கர்மம் செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்ஷவின் தோசம் நீக்கவே இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அரசியலில் தொடரும் நெருக்கடி: மொட்டு கட்சி மற்றும் ராஜபக்சர்களுக்கு விரட்டப்பட்ட தோசம் samugammedia பொதுஜன பெரமுன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தோசம் நீக்கும் நோக்கில் சலுபாலி எனப்படும் சாந்தி கர்மம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.பொதுஜன பெரமுனவின் பெலியஅத்த தொகுதி சபைக் கூட்டத்தின் இறுதியில் இந்த சாந்தி கர்மம் செய்யப்பட்டுள்ளது.பொதுஜன பெரமுனவின் தொகுதி சபைக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் பெலியத்த புவக்தன்டாவ பிரதேசத்தில் நடைபெற்றது.இதன்போது, அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த, டி.வி.சானக்க, தேனுக விதானகம திஸ்ஸ குட்டியாராச்சி டபிள்யூ.டி. வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சபைக் கூட்டத்தின் இறுதியில் சலுபாலி எனப்படும் சாந்தி கர்மம் செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்ஷவின் தோசம் நீக்கவே இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.