வடக்கில் பதவி ஆசை பிடித்து தமிழ் அரசியல்வாதிகள் திரிவதாக வடக்கு மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயிகளுக்கு பிரச்சினை எனில் குரல் கொடுக்கும் அவரசில்வாதிகள், அரச அதிகாரிகள் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படும் போது கண்டுகொள்ளாமலிருப்பதாகவும்,
தற்போது கடலில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை மற்றும் கடலட்டை தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை மீன்பிடி அமைச்சரோ, கடற்படையோ அல்லது நீரியல் வளத்துறையோ கண்டுகொள்வதில்லை எனவும் தெரிவித்ததுடன்,
முல்லைத்தீவில் கடற்படை அதிகமான சட்டவிரோத தொழிலாளர்கள், எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை கைது செய்து வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகமான சட்டவிரோத தொழில்கள் இடம் பெற்றுவருவதாகவும்,
அவற்றிற்கு எதிராக ஏந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் உரியவர்கள் உரிய கவனமெடுத்து மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
பதவி ஆசை பிடித்து திரியும் கேடுகெட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் - வர்ணகுலசிங்கம் காட்டம் வடக்கில் பதவி ஆசை பிடித்து தமிழ் அரசியல்வாதிகள் திரிவதாக வடக்கு மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,விவசாயிகளுக்கு பிரச்சினை எனில் குரல் கொடுக்கும் அவரசில்வாதிகள், அரச அதிகாரிகள் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படும் போது கண்டுகொள்ளாமலிருப்பதாகவும், தற்போது கடலில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை மற்றும் கடலட்டை தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை மீன்பிடி அமைச்சரோ, கடற்படையோ அல்லது நீரியல் வளத்துறையோ கண்டுகொள்வதில்லை எனவும் தெரிவித்ததுடன், முல்லைத்தீவில் கடற்படை அதிகமான சட்டவிரோத தொழிலாளர்கள், எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை கைது செய்து வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகமான சட்டவிரோத தொழில்கள் இடம் பெற்றுவருவதாகவும், அவற்றிற்கு எதிராக ஏந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் உரியவர்கள் உரிய கவனமெடுத்து மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்https://web.facebook.com/24Samugam/videos/1399898634490222