வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தம்பதியரை நேற்று (13) இரவு கேகாலையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்பதியருக்கு எதிராக பல முறைப்பாடுகள் பதிவாகியிருந்தமை தொடர்பில் ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி இவர்கள் 820,000 ரூபாவை பெற்று மோசடி செய்துள்ளமை லிசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேகத்தில் கைதான தம்பதியர் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தம்பதியினர் இதேபோன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பலரிடம் பண மோசடி செய்துள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த தம்பதியினரால் ஏமாற்றப்பட்டவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் சிக்கினர். பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள் samugammedia வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தம்பதியரை நேற்று (13) இரவு கேகாலையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.தம்பதியருக்கு எதிராக பல முறைப்பாடுகள் பதிவாகியிருந்தமை தொடர்பில் ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி இவர்கள் 820,000 ரூபாவை பெற்று மோசடி செய்துள்ளமை லிசாரணைகளில் தெரிய வந்துள்ளது.சந்தேகத்தில் கைதான தம்பதியர் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தத் தம்பதியினர் இதேபோன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பலரிடம் பண மோசடி செய்துள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.மேலும், இந்த தம்பதியினரால் ஏமாற்றப்பட்டவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.