சிவ பூமி அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் நாவற்குழி நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை இன்றைய தினம் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
நீண்ட காலமாக குறித்த இடத்தில் சிவன் சிலை இருந்த போதிலும் சிவ பூமி அறக்கட்டளையினரால் செயலாளர் நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும்.
அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் ஏழு அடி உயரமான கருங்கல்லிலால் ஆன சிவபெருமான் சிலை இன்று காலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் கார்த்திகை விளக்கீடான இன்றையதினம் மின்சார தீபங்களுக்கு மத்தியில் செம்மணி வாயில் சிவலிங்கப் பெருமானின் திருக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.