• May 02 2024

யாழில் தீவிரமடையும் டெங்குத் தொற்று; கொழும்புக் குழுவினர் ஆய்வு - வழக்கு தாக்கல் செய்ய பணிப்பு!

Chithra / Jan 14th 2024, 1:23 pm
image

Advertisement


 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு தொற்றுப் பரவுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டுள்ள குடியிருப்புக்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் எந்தவித பாரபட்சமும், தயக்கமும் இல்லாமல் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும்  யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரட்ன அறிவுறுத்தல் விடுத்துள்ளார்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்குத் தொற்று அபாய கட்டத்தில் காணப்படுகின்றது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும், டெங்குத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இதன்படி, டெங்கு நுளம்பு உற்பத்திக்கு ஏதுவான நிலைகளைக் கொண்ட, நீர் தேங்கும் வகையில் கழிவுகளைக் கொண்டுள்ள குடியிருப்பாளர்கள்,

வெற்றுக்காணிகளைப் பராமரிக்காத உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பானவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரட்ன அறிவுறுத்தல்  விடுத்துள்ளார்

இதேவேளை யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டடுள்ளனர்.

கொழும்பு உட்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வந்துள்ள மருத்துவர்களும் நேற்று  இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுவினருக்கு மேலதிகமாக, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் டெங்கு தொடர்பான கள ஆய்வுப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.


யாழில் தீவிரமடையும் டெங்குத் தொற்று; கொழும்புக் குழுவினர் ஆய்வு - வழக்கு தாக்கல் செய்ய பணிப்பு  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு தொற்றுப் பரவுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டுள்ள குடியிருப்புக்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் எந்தவித பாரபட்சமும், தயக்கமும் இல்லாமல் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும்  யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரட்ன அறிவுறுத்தல் விடுத்துள்ளார்யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்குத் தொற்று அபாய கட்டத்தில் காணப்படுகின்றது.டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும், டெங்குத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.இதன்படி, டெங்கு நுளம்பு உற்பத்திக்கு ஏதுவான நிலைகளைக் கொண்ட, நீர் தேங்கும் வகையில் கழிவுகளைக் கொண்டுள்ள குடியிருப்பாளர்கள்,வெற்றுக்காணிகளைப் பராமரிக்காத உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பானவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரட்ன அறிவுறுத்தல்  விடுத்துள்ளார்இதேவேளை யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டடுள்ளனர்.கொழும்பு உட்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வந்துள்ள மருத்துவர்களும் நேற்று  இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுவினருக்கு மேலதிகமாக, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் டெங்கு தொடர்பான கள ஆய்வுப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement