ஐக்கிய தேசியக் கட்சியின் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று(19) காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயளாளர் பாலித ரங்கே பண்டாரா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா ஆகியோரின் பங்கேற்புடன் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலில் கட்சி சார்ந்தோர் மற்றும் பொதுமக்களெனப் பலர் கலந்துகொண்டனர்.