பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும்
விழிப்புலனற்ற மாணவர்களுக்கு வெள்ளைப் பிரம்புடன் நடப்பதற்கு பயிற்சி
வழங்கும் விழிப்புணர்வு நிகழ்வு யாழில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் எஸ். சுதர்ஷன் தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
யாழிலுள்ள
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெள்ளை பிரம்புடன் நடப்பதற்கு
பயிற்சி வழங்குதலும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக
விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்
பிரதேச செயலகத்தில் பிரதேச செயலரினால் வெள்ளை பிரம்புகள் சீருடைகள் வழங்கி
ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்ந்து பொது
இடங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந் நிகழ்வில் பிரதேச செயலர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள், விழிப்புலனற்றோர் சங்க அமைப்புக்கள் உட்பட விழிப்புலனற்ற மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.