பாலத்திற்கு கீழுள்ள வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரட்டைத் தட்டு பேருந்து ஒன்று பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த பயங்கர விபத்து லண்டன் மான்செஸ்டர் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மான்செஸ்டர் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இரட்டைத் தட்டு பேருந்து, அங்கிருந்த பாலத்திற்கு அருகில் பயணித்த வேளை விபத்திற்குள்ளாகியது.
மான்செஸ்டர் பாலம் அருகே பயணித்த பேருந்து பாலத்தின் மேற்தளத்தில் விளிம்புடன் உரசிய வேளையில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது பேருந்தில் இரண்டாவது அடுக்கில் பயணித்த பயணிகள் பலத்த காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் இரட்டைத் தட்டு பேருந்தின் மேல் தளம் முழுவதுமாக சிதறியதில், இரண்டாவது அடுக்கில் இருந்த பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
கிட்டத்தட்ட பயணிகள் 20 பேர் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலம் இருப்பது தெரிந்தும் பேருந்தை கவனக்குறைவாக இயக்கியதற்காக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலத்தின் மேற்தளத்தின் விளிம்புடன் இரட்டைத் தட்டு பேருந்து மோதிய பயங்கரமான காணொளி வெளிவந்து அனைவரையும் ஒரு கணம் உலுக்கியுள்ளது எனலாம்.
பாலத்தில் மோதிய இரட்டைத்தட்டு பேருந்து; மடிந்து விழுந்த பயணிகள் - லண்டனில் நடந்த கோர காட்சி பாலத்திற்கு கீழுள்ள வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரட்டைத் தட்டு பேருந்து ஒன்று பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த பயங்கர விபத்து லண்டன் மான்செஸ்டர் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. மான்செஸ்டர் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இரட்டைத் தட்டு பேருந்து, அங்கிருந்த பாலத்திற்கு அருகில் பயணித்த வேளை விபத்திற்குள்ளாகியது. மான்செஸ்டர் பாலம் அருகே பயணித்த பேருந்து பாலத்தின் மேற்தளத்தில் விளிம்புடன் உரசிய வேளையில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது பேருந்தில் இரண்டாவது அடுக்கில் பயணித்த பயணிகள் பலத்த காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் இரட்டைத் தட்டு பேருந்தின் மேல் தளம் முழுவதுமாக சிதறியதில், இரண்டாவது அடுக்கில் இருந்த பயணிகள் பலத்த காயமடைந்தனர். கிட்டத்தட்ட பயணிகள் 20 பேர் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலம் இருப்பது தெரிந்தும் பேருந்தை கவனக்குறைவாக இயக்கியதற்காக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பாலத்தின் மேற்தளத்தின் விளிம்புடன் இரட்டைத் தட்டு பேருந்து மோதிய பயங்கரமான காணொளி வெளிவந்து அனைவரையும் ஒரு கணம் உலுக்கியுள்ளது எனலாம்.