• Apr 07 2025

மோடியை சந்திப்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவுக்கு நேரம் கிடைக்கவில்லை - ஈ.பி.டி.பி விளக்கம்!

Chithra / Apr 7th 2025, 2:09 pm
image

 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்கு  கால அவகாசம்  போதாமையினால் குறித்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இருந்தும்  எல்லைதாண்டும் இந்திய கடற்றொழிலாளர் தொடர்பான எமது வலியுறுத்தல்கள் பாரதப் பிரதமரிடம் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது ஏனைய பல தமிழ் அரசியல் தரப்பினர் அவரை சந்தித்திருந்தனர். 

அந்த வகையில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் பங்குபற்றாமை குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.


மோடியை சந்திப்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவுக்கு நேரம் கிடைக்கவில்லை - ஈ.பி.டி.பி விளக்கம்  பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்கு  கால அவகாசம்  போதாமையினால் குறித்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.இருந்தும்  எல்லைதாண்டும் இந்திய கடற்றொழிலாளர் தொடர்பான எமது வலியுறுத்தல்கள் பாரதப் பிரதமரிடம் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது ஏனைய பல தமிழ் அரசியல் தரப்பினர் அவரை சந்தித்திருந்தனர். அந்த வகையில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் பங்குபற்றாமை குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement