ஜேர்மனியில் அநுர முன்னிலையில் ஈழத்தமிழர்கள் போராட்டம்...!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில் நேற்று (10) பேர்லின் நகரில் திரண்ட நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஈழத்தமிழர்களுடன் வேறு மக்களும் கலந்துகொண்டு தங்களின் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் உண்மையான நிலைமையை வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் ஜேர்மன் மொழியில் காட்சிப்படுத்தப்பட்டன.
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினரும் “Die Linke ” கட்சியைச் சேர்ந்தவருமான Ferat Koçak என்பவர், போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழர்களுக்கு தனது உறுதுணையை வழங்கியதோடு ஈழத்தமிழர்கள் சார்ந்த ஜேர்மன் நாட்டின் மௌனத்தையும் கண்டித்து உரையாற்றினார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட நிலையில், இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜேர்மனியிலுள்ள ஈழத்தமிழர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரவின் ஜேர்மன் விஜயத்தை முன்னிட்டு ஜேர்மன் வாழ் ஈழத்தமிழர்கள் போராட்டம். ஜேர்மனியில் அநுர முன்னிலையில் ஈழத்தமிழர்கள் போராட்டம்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில் நேற்று (10) பேர்லின் நகரில் திரண்ட நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ஈழத்தமிழர்களுடன் வேறு மக்களும் கலந்துகொண்டு தங்களின் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் உண்மையான நிலைமையை வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் ஜேர்மன் மொழியில் காட்சிப்படுத்தப்பட்டன. ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினரும் “Die Linke ” கட்சியைச் சேர்ந்தவருமான Ferat Koçak என்பவர், போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழர்களுக்கு தனது உறுதுணையை வழங்கியதோடு ஈழத்தமிழர்கள் சார்ந்த ஜேர்மன் நாட்டின் மௌனத்தையும் கண்டித்து உரையாற்றினார். இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட நிலையில், இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜேர்மனியிலுள்ள ஈழத்தமிழர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.