பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மரத்தில் இருந்து கீழே விழுந்தவரை அயலவர்கள் கஹவத்தை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.