• Sep 20 2024

முல்லைத்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த யானை- தொடரும் விசாரணைகள்

Sharmi / Aug 2nd 2024, 1:53 pm
image

Advertisement

முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயங்கன்குள பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று இன்றையதினம்(02) மீட்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு ஐயங்கன்குளம் பகுதியில் இன்று(02) அதிகாலை  யானையின் சடலம்  இருப்பதை விவசாயிகள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்தே குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

யானையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

அதேவேளை, அப்பகுதியில் மர்மமான யானையின் இறப்பு தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், குறித்த யானையின் மரணம் தொடர்பான காரணத்தை மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர். 



முல்லைத்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த யானை- தொடரும் விசாரணைகள் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயங்கன்குள பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று இன்றையதினம்(02) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஐயங்கன்குளம் பகுதியில் இன்று(02) அதிகாலை  யானையின் சடலம்  இருப்பதை விவசாயிகள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்தே குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யானையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.அதேவேளை, அப்பகுதியில் மர்மமான யானையின் இறப்பு தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், குறித்த யானையின் மரணம் தொடர்பான காரணத்தை மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement