• Oct 05 2024

தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் வைத்திய சேவையை வளப்படுத்துங்கள்- ஏ.எல் சுகத் பிரசாந்த் வேண்டுகோள்..!

Sharmi / Oct 4th 2024, 9:20 am
image

Advertisement

தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்களின் வைத்திய சேவையை வளப்படுத்துங்கள் என தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் ஏ.எல்.சுகத் பிரசாந் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்றையதினம்(03) மாலை இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை வெளிப்படுத்தும் வகையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.

அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலமாகவே சரியான வைத்திய சேவையை மக்களுக்கு வழங்க முடியும்.

கடந்த மூன்று நான்கு மாதங்களாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த பிரச்சினைக்கு அரசாங்கம் தகுந்த முடிவினை எடுக்கவில்லை.

இதனால் தமிழ், சிங்கள ,முஸ்லிம் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த போதனா வைத்தியசாலையில் உள்ள பணிப்பாளர்  தமது சேவை செய்வதும் இல்லை அங்கு உள்ள பணியாளர்களை வேலைகளை செய்யுமாறு கூறுவதும் இல்லை என குற்றஞ்சாட்டப்படுகின்றது.

போதனா வைத்தியசாலையில் வைத்திய பணிப்பாளர் பல வருடங்களாக இருப்பதனால் அவர் எல்லோரையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றார்.

இவர் இருப்பதனால் இந்த வைத்தியசாலை சரியான முறையில் இயங்காமல் இருக்கிறது என்று குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. 

வைத்திய பணிப்பாளர் என்ற பெயரளவில் மட்டும் தான் இருக்கின்றார் அவருக்கு கீழ் உள்ள உதவியாளர்கள் தான் இவர் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்கின்றார்கள்.

வைத்திய பணிப்பாளர் தன்னுடைய வேலையை சரியாக செய்யாததனால் வைத்தியசாலை சீரழிந்து காணப்படுகின்றது. அங்குள்ள வைத்தியர்கள் உட்பட ஏனைய பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி அவர்களே நீங்கள் பிறந்த ஊரான அனுராதபுரம் தம்புத்தேகமா உங்கள் ஊர் என்று இல்லாமல் இவ்வாறான பிரச்சினைக்கு தகுந்த தீர்வினை பெற்று தர வேண்டும்.

கிழக்கு மாகாண உட்பட ஏனைய மாகாணங்களில் இருந்தும் வைத்திய சேவைக்காக இங்கு வருகின்றார்கள். எல்லா இன மக்களும் வைத்திய தேவைக்காக வருகின்றார்கள்.

இந்த நோயாளர்களின் நலம் கருதி குறைகள் களையப்பட வேண்டும் இந்த வைத்திய சாலையின் குறைபாடுகள் சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டபோது சரியான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை 

இங்கு மலசல கூடங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை பாரிய ஒரு பிரச்சினையாக உள்ளது.

எனவே, நோயாளர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இந்த வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் வைத்திய சேவையை வளப்படுத்துங்கள்- ஏ.எல் சுகத் பிரசாந்த் வேண்டுகோள். தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்களின் வைத்திய சேவையை வளப்படுத்துங்கள் என தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் ஏ.எல்.சுகத் பிரசாந் தெரிவித்தார்.திருகோணமலையில் நேற்றையதினம்(03) மாலை இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை வெளிப்படுத்தும் வகையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலமாகவே சரியான வைத்திய சேவையை மக்களுக்கு வழங்க முடியும்.கடந்த மூன்று நான்கு மாதங்களாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.அந்த பிரச்சினைக்கு அரசாங்கம் தகுந்த முடிவினை எடுக்கவில்லை.இதனால் தமிழ், சிங்கள ,முஸ்லிம் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.அந்த போதனா வைத்தியசாலையில் உள்ள பணிப்பாளர்  தமது சேவை செய்வதும் இல்லை அங்கு உள்ள பணியாளர்களை வேலைகளை செய்யுமாறு கூறுவதும் இல்லை என குற்றஞ்சாட்டப்படுகின்றது.போதனா வைத்தியசாலையில் வைத்திய பணிப்பாளர் பல வருடங்களாக இருப்பதனால் அவர் எல்லோரையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றார்.இவர் இருப்பதனால் இந்த வைத்தியசாலை சரியான முறையில் இயங்காமல் இருக்கிறது என்று குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. வைத்திய பணிப்பாளர் என்ற பெயரளவில் மட்டும் தான் இருக்கின்றார் அவருக்கு கீழ் உள்ள உதவியாளர்கள் தான் இவர் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்கின்றார்கள்.வைத்திய பணிப்பாளர் தன்னுடைய வேலையை சரியாக செய்யாததனால் வைத்தியசாலை சீரழிந்து காணப்படுகின்றது. அங்குள்ள வைத்தியர்கள் உட்பட ஏனைய பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஜனாதிபதி அவர்களே நீங்கள் பிறந்த ஊரான அனுராதபுரம் தம்புத்தேகமா உங்கள் ஊர் என்று இல்லாமல் இவ்வாறான பிரச்சினைக்கு தகுந்த தீர்வினை பெற்று தர வேண்டும்.கிழக்கு மாகாண உட்பட ஏனைய மாகாணங்களில் இருந்தும் வைத்திய சேவைக்காக இங்கு வருகின்றார்கள். எல்லா இன மக்களும் வைத்திய தேவைக்காக வருகின்றார்கள்.இந்த நோயாளர்களின் நலம் கருதி குறைகள் களையப்பட வேண்டும் இந்த வைத்திய சாலையின் குறைபாடுகள் சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டபோது சரியான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை இங்கு மலசல கூடங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை பாரிய ஒரு பிரச்சினையாக உள்ளது.எனவே, நோயாளர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இந்த வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement