இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான திருகோணமலை டிப்போவின் அனைத்து பஸ்களும் இன்று செவ்வாய்கிழமை சேவையில் ஈடுவதை நிறுத்திவிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
அத்தோடு பஸ் டிப்போவுக்கு முன்னால் வாசகங்களை தொங்கவிட்டவாறு கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருகோணமலை டிப்போ அத்தியட்சகரின் தன்னிச்சையான போக்கை கண்டித்தே டிப்போ ஊழியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.