• Sep 22 2024

அநுர ஜனாதிபதியானதும் பெண் ஒருவருக்கே பிரதமர் பதவி...! விஜித ஹேரத் உறுதி...! samugammedia

Sharmi / Jan 15th 2024, 1:22 pm
image

Advertisement

தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானதன் பின்னர் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். .

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பதால், பெண் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதே தமது கட்சியின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதால், தனது சொந்த அரசாங்கமும் அந்த வேலைத்திட்டத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்ததுடன், நிலைமைகளை இலகுபடுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் மீளாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தனது வேலைத்திட்டத்திற்கு துரோகமிழைக்கும் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் அவர் அந்த கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அநுர ஜனாதிபதியானதும் பெண் ஒருவருக்கே பிரதமர் பதவி. விஜித ஹேரத் உறுதி. samugammedia தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானதன் பின்னர் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். .நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பதால், பெண் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதே தமது கட்சியின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதால், தனது சொந்த அரசாங்கமும் அந்த வேலைத்திட்டத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்ததுடன், நிலைமைகளை இலகுபடுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் மீளாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், தனது வேலைத்திட்டத்திற்கு துரோகமிழைக்கும் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் அவர் அந்த கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement