வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வருடன் தெய்யந்தர பிரதேசத்தில் வைத்து இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்தின் பேரில் இந்த முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ விசேட அதிரடிப்படை வீரர் 44 வயதுடையவராவார்.