• May 24 2026

வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

Chithra / Sep 24th 2025, 8:20 am
image

வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

பன்னங்கண்டி - கிளிநொச்சியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்து சசிக்குமார்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 21ஆம் திகதி இவருக்கு திடீரென வயிறு வீக்கம் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

பின்னர் அன்றிரவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.பன்னங்கண்டி - கிளிநொச்சியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்து சசிக்குமார்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 21ஆம் திகதி இவருக்கு திடீரென வயிறு வீக்கம் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அன்றிரவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement