• Aug 14 2025

வெளிவிவகார பிரதி அமைச்சர் குச்சவெளிக்கு களவிஜயம்!

shanuja / Aug 14th 2025, 12:18 pm
image

திருகோணமலை - குச்சவெளி பகுதிக்கு வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று புதன்கிழமை(13) களப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.


பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து கொள்வதற்காக அமைச்சர் இந்த பயணத்தை முன்னெடுத்தார்.


இதன்போது, புதிய அரசாங்கத்தால், குச்சவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முடிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்படாத அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பகுப்பாய்வு செய்து, மதிப்பீட்டு நடவடிக்கையினை மேற்கொண்டார். 


இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் , வீட்டு புனர்நிர்மாண வேலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளையும் பிரதி அமைச்சர் நான்கு பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.


மேலும், மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட பிரதி அமைச்சர், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு நிதியின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நாவற்சோலை டவர் வீதியையும் பிரதி அமைச்சர் திறந்து வைத்தார்.


குறித்த களவிஜயத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வெளிவிவகார பிரதி அமைச்சர் குச்சவெளிக்கு களவிஜயம் திருகோணமலை - குச்சவெளி பகுதிக்கு வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று புதன்கிழமை(13) களப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து கொள்வதற்காக அமைச்சர் இந்த பயணத்தை முன்னெடுத்தார்.இதன்போது, புதிய அரசாங்கத்தால், குச்சவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முடிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்படாத அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பகுப்பாய்வு செய்து, மதிப்பீட்டு நடவடிக்கையினை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் , வீட்டு புனர்நிர்மாண வேலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளையும் பிரதி அமைச்சர் நான்கு பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.மேலும், மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட பிரதி அமைச்சர், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு நிதியின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நாவற்சோலை டவர் வீதியையும் பிரதி அமைச்சர் திறந்து வைத்தார்.குறித்த களவிஜயத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement