• Oct 18 2024

கனடாவில் திரையரங்கு மீது துப்பாக்கி சூடு...! இலங்கை தமிழருக்கு எதிராக குற்றச்சாட்டு...!

Sharmi / Jun 13th 2024, 1:07 pm
image

Advertisement

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழருக்கு சொந்தமான திரையரங்கு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது நபராகவே இலங்கை தமிழர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரான பிரம்டன் நகரை சேர்ந்த 43 வயதான நபர் மீதே குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கடந்த ஜனவரி 24ஆம் திகதி டொரான்டோ பெரும்பாகத்தில் உள்ள வெவ்வேறு திரையரங்குகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி மார்கம் நகரைச் சேர்ந்த 27 வயதான ஆண்ட்ரூ டக்ளஸ் என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, மே 22ஆம் திகதி  இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனினும், இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

சம்பவம்  தொடர்பில்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த விபரங்களையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.














கனடாவில் திரையரங்கு மீது துப்பாக்கி சூடு. இலங்கை தமிழருக்கு எதிராக குற்றச்சாட்டு. கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழருக்கு சொந்தமான திரையரங்கு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது நபராகவே இலங்கை தமிழர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.இலங்கைத் தமிழரான பிரம்டன் நகரை சேர்ந்த 43 வயதான நபர் மீதே குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கனடாவில் கடந்த ஜனவரி 24ஆம் திகதி டொரான்டோ பெரும்பாகத்தில் உள்ள வெவ்வேறு திரையரங்குகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி மார்கம் நகரைச் சேர்ந்த 27 வயதான ஆண்ட்ரூ டக்ளஸ் என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையிலேயே, மே 22ஆம் திகதி  இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.சம்பவம்  தொடர்பில்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த விபரங்களையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement