யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற குடும்பஸ்தர் இதுவரை கரை திரும்பாத நிலையில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் இன்று அதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலிற்காக சென்றுள்ளார்.
09 மணியாகியும் அவர் கரை திரும்பதாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.
இதனை அவதானித்த தேடிச்சென்ற மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தற்போது பல படகுகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்; கட்டுமரம் மீட்பு- தேடும் பணி தீவிரம். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற குடும்பஸ்தர் இதுவரை கரை திரும்பாத நிலையில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,குறித்த நபர் இன்று அதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலிற்காக சென்றுள்ளார்.09 மணியாகியும் அவர் கரை திரும்பதாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.இதனை அவதானித்த தேடிச்சென்ற மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தற்போது பல படகுகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.சம்பவம் தொடர்பாக மருதங்கேணி போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.