• May 17 2024

கனடாவில், அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Tamil nila / Dec 20th 2022, 10:15 pm
image

Advertisement

கனடாவின், டொரண்டோ நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஒவ்வொரு வீடாக புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

 

தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் அந்த நபரை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். அங்கு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குடியிருப்புவாசி ஒருவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கனடாவில், கைத்துப்பாக்கிகள் விற்பனைக்குத்தடை விதிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும், அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில், அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு கனடாவின், டொரண்டோ நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஒவ்வொரு வீடாக புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் அந்த நபரை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். அங்கு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குடியிருப்புவாசி ஒருவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில், கைத்துப்பாக்கிகள் விற்பனைக்குத்தடை விதிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும், அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement