• Jun 11 2025

கூட்ட நெரிசலால் ரயில் படியில் பயணித்த ஐவர் தவறி விழுந்து உயிரிழப்பு ; பலர் காயம் - மும்பையில் சோகம்...!

shanuja / Jun 10th 2025, 2:43 pm
image

மும்பை - புறநகர் ரயிலில் அதிகரித்த கூட்ட நெரிசலால் ரயில் படியில் பயணித்த ஐந்து பேர் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளனர்.


மும்பையில் இன்று காலை மத்திய புறநகர் பகுதியான கல்யான் பகுதியில் இருந்து சி.எஸ்.டி.நோக்கி வந்த புறநகர் ரயிலிலே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்படுவது வழக்கம். இதனால் அடிக்கடி ரயிலில் படியில் நின்று பயணம் செய்பவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் ரயிலில் படியில் நின்று பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.


காலை வேளையில் வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் மாலை நேரத்தில் வேலைகளை முடித்து விட்டு ரயிலில்  பயணம் செய்வது  என்பது அனைவருக்கும் சவாலான ஒன்றானது. இதனால்  இரண்டு நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. 


இந்த நிலையிலேயே இன்று காலை  மத்திய புறநகர் பகுதியான கல்யான் பகுதியில் இருந்து சி.எஸ்.டி.நோக்கி  பயணித்த புறநகர் ரயில்,  திவா மற்றும் மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கு இடையே  பயணித்த போது  ரயிலில் வாசலில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவறி கீழே விழுந்தனர். 


ஒரே நேரத்தில் 10 முதல் 12 பேர் தவறி விழுந்தனர். அவர்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  சம்பவத்தை அறிந்த ரயில்வே  பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீழே விழுந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.


அடிக்கடி இது போன்ற சம்பவம் நடப்பதால் இனி எதிர்காலத்தில் தயாரிக்கக்கூடிய அனைத்து புறநகர் ரயில்களிலும் கதவுகள் தானாக மூடிக்கொள்ளும் வகையில் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டில் 51 ஆயிரம் பேர் மும்பை ரயில்களில் அடிபட்டு அல்லது கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர் என்று தரவுகள் குறிப்பிடுகின்றன.

கூட்ட நெரிசலால் ரயில் படியில் பயணித்த ஐவர் தவறி விழுந்து உயிரிழப்பு ; பலர் காயம் - மும்பையில் சோகம். மும்பை - புறநகர் ரயிலில் அதிகரித்த கூட்ட நெரிசலால் ரயில் படியில் பயணித்த ஐந்து பேர் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளனர்.மும்பையில் இன்று காலை மத்திய புறநகர் பகுதியான கல்யான் பகுதியில் இருந்து சி.எஸ்.டி.நோக்கி வந்த புறநகர் ரயிலிலே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்படுவது வழக்கம். இதனால் அடிக்கடி ரயிலில் படியில் நின்று பயணம் செய்பவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் ரயிலில் படியில் நின்று பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.காலை வேளையில் வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் மாலை நேரத்தில் வேலைகளை முடித்து விட்டு ரயிலில்  பயணம் செய்வது  என்பது அனைவருக்கும் சவாலான ஒன்றானது. இதனால்  இரண்டு நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இந்த நிலையிலேயே இன்று காலை  மத்திய புறநகர் பகுதியான கல்யான் பகுதியில் இருந்து சி.எஸ்.டி.நோக்கி  பயணித்த புறநகர் ரயில்,  திவா மற்றும் மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கு இடையே  பயணித்த போது  ரயிலில் வாசலில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவறி கீழே விழுந்தனர். ஒரே நேரத்தில் 10 முதல் 12 பேர் தவறி விழுந்தனர். அவர்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  சம்பவத்தை அறிந்த ரயில்வே  பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீழே விழுந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.அடிக்கடி இது போன்ற சம்பவம் நடப்பதால் இனி எதிர்காலத்தில் தயாரிக்கக்கூடிய அனைத்து புறநகர் ரயில்களிலும் கதவுகள் தானாக மூடிக்கொள்ளும் வகையில் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டில் 51 ஆயிரம் பேர் மும்பை ரயில்களில் அடிபட்டு அல்லது கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர் என்று தரவுகள் குறிப்பிடுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement