• Nov 12 2025

இந்தியாவில் கோரம்; நிலத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

Chithra / Oct 6th 2025, 12:54 pm
image

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் திடீர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி அங்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்றுமுன்தினம் இரவு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. 

இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மேலும் மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. 

நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கி அங்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே நிலச்சரிவு காரணமாக டார்ஜிலிங்கில் இருந்து சிக்கிம் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் நவராத்திரி விடுமுறையை கொண்டாட டார்ஜிலிங் சென்ற ஏராளமான சுற்றுலா பயணிகள், தற்போது அங்கேயே சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில்  மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 


இந்தியாவில் கோரம்; நிலத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் திடீர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி அங்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்றுமுன்தினம் இரவு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மேலும் மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கி அங்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே நிலச்சரிவு காரணமாக டார்ஜிலிங்கில் இருந்து சிக்கிம் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நவராத்திரி விடுமுறையை கொண்டாட டார்ஜிலிங் சென்ற ஏராளமான சுற்றுலா பயணிகள், தற்போது அங்கேயே சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில்  மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement