சீனாவில் சுமார் 4 வருடங்களில் முதல் தடவையாக போயிங் 737 மெக்ஸ் ரக பணிகள் விமானமொன்று இன்று சேவையில் ஈடுபட்டது.
கடந்த 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர் சீனாவில் இந்த ரக பயணிகள் விமானம் பறந்தமை இதுவே முதல் தடவையாகும்.
போயிங் 737 மெக்ஸ் ரகத்தைச் சேர்ந்த விமானமொன்று 2018 ஒக்டோபரில் இந்தோனேஷியாவில் வீழ்ந்ததால் 189 பேர் உயிரிழந்தனர்.
அதன்பின்னர் 2019 மார்ச் மாதம் மற்றொரு போயிங் 737 மெக்ஸ் விமானம் எத்தியோப்பியாவில் வீழ்ந்ததால் 157 பேர் உயிரிழ்நதனர்.
அதையடுத்து உலகம் முழுவதும் மெக்ஸ் 737 ரக விமானங்கள் பறப்பதற்கு 2019 மார்ச் மாதம் தடைகள் விதிக்கப்பட்டன.
சீனாவே முதலில் இத்தடையை விதித்தது. பல மாதங்களின் பின்னர் இத்தடை நீக்கப்பட்டபோதிலும் சீனாவில் தொடர்ந்தும் அத்தடை நீடித்தது.
இந்நிலையில், சைனா சதர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் மெக்ஸ் 737 ரக விமானமொன்றும், சீனாவின் ஸெங்ஸோ விமானமொன்றும் சேவையை ஆரம்பித்துள்ளது.
நான்கு வருடங்களில் முதல் தடவையாக சீனாவில் பறந்த விமானம் சீனாவில் சுமார் 4 வருடங்களில் முதல் தடவையாக போயிங் 737 மெக்ஸ் ரக பணிகள் விமானமொன்று இன்று சேவையில் ஈடுபட்டது.கடந்த 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர் சீனாவில் இந்த ரக பயணிகள் விமானம் பறந்தமை இதுவே முதல் தடவையாகும்.போயிங் 737 மெக்ஸ் ரகத்தைச் சேர்ந்த விமானமொன்று 2018 ஒக்டோபரில் இந்தோனேஷியாவில் வீழ்ந்ததால் 189 பேர் உயிரிழந்தனர்.அதன்பின்னர் 2019 மார்ச் மாதம் மற்றொரு போயிங் 737 மெக்ஸ் விமானம் எத்தியோப்பியாவில் வீழ்ந்ததால் 157 பேர் உயிரிழ்நதனர்.அதையடுத்து உலகம் முழுவதும் மெக்ஸ் 737 ரக விமானங்கள் பறப்பதற்கு 2019 மார்ச் மாதம் தடைகள் விதிக்கப்பட்டன.சீனாவே முதலில் இத்தடையை விதித்தது. பல மாதங்களின் பின்னர் இத்தடை நீக்கப்பட்டபோதிலும் சீனாவில் தொடர்ந்தும் அத்தடை நீடித்தது.இந்நிலையில், சைனா சதர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் மெக்ஸ் 737 ரக விமானமொன்றும், சீனாவின் ஸெங்ஸோ விமானமொன்றும் சேவையை ஆரம்பித்துள்ளது.