• May 03 2024

ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்கள் தீவிர முயற்சி..? வெளியான பரபரப்பு தகவல்

Chithra / Jan 13th 2024, 9:51 am
image

Advertisement

 

ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதனை முற்றாக நிராகரிக்கிறேன் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உள்நாட்டு, வெளிநாட்டு  பிரதிநிதிகளை பயன்படுத்தி சஜித்தையும் ரணிலையும் இணைக்க பெரும் அரசியல் தந்திரங்கள் முனனெடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.

வெளிநாடுகளின் ஆண், பெண் தூதுவர்களும் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன.  

பணம் கொடுத்தே இவ்வாறான பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த பொய்யை மக்களிடையே பரப்புவதை உடனடியாக நிறுத்துங்கள்.

எங்களுக்கு அரசியல் டீல் போட வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களின் முழுமையான ஆதரவு எமக்கு இருக்கிறது.    என்றார். 

ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்கள் தீவிர முயற்சி. வெளியான பரபரப்பு தகவல்  ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதனை முற்றாக நிராகரிக்கிறேன் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.பாராளுமன்றத்தில்  விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.உள்நாட்டு, வெளிநாட்டு  பிரதிநிதிகளை பயன்படுத்தி சஜித்தையும் ரணிலையும் இணைக்க பெரும் அரசியல் தந்திரங்கள் முனனெடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.வெளிநாடுகளின் ஆண், பெண் தூதுவர்களும் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன.  பணம் கொடுத்தே இவ்வாறான பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த பொய்யை மக்களிடையே பரப்புவதை உடனடியாக நிறுத்துங்கள்.எங்களுக்கு அரசியல் டீல் போட வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களின் முழுமையான ஆதரவு எமக்கு இருக்கிறது.    என்றார். 

Advertisement

Advertisement

Advertisement