• May 17 2024

மோடியை கசாப்புக்கடைக்காரர் என விமர்சித்த அயல்நாட்டு மந்திரி!

Tamil nila / Dec 16th 2022, 6:40 pm
image

Advertisement

அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் பேச்சிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, பின்லேடன் இறந்துவிட்டார் , குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார் என இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் மந்திரி விமர்சித்தார்.


அதோடு காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்' என்றும் அவர் கூறினார். இந்நிலையில் அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்,


ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுதவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம்' என்றார்.


இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தர் கூறுகையில்,


ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது.


அதோடு பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்' என்றும் அவர் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.      



மோடியை கசாப்புக்கடைக்காரர் என விமர்சித்த அயல்நாட்டு மந்திரி அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேச்சிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, பின்லேடன் இறந்துவிட்டார் , குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார் என இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் மந்திரி விமர்சித்தார்.அதோடு காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்' என்றும் அவர் கூறினார். இந்நிலையில் அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்,ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுதவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம்' என்றார்.இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தர் கூறுகையில்,ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது.அதோடு பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்' என்றும் அவர் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.      

Advertisement

Advertisement

Advertisement