சாரதிகளின் கவனயீனம் மற்றும் அதிவேகம் காரணமாக இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டன, அதிசொகுசு பயணிகள் பேருந்து பயணிகள் அதிஷ்டவசமாக தப்பித்துக்கொண்டனர்.
ஏ9 பிரதான வீதியில் கொடிகாமம்,கொயிலாமனை சந்திக்கு அண்மையாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (20) இரவு 11:30 மணியளவில் ஒரே தளத்தில் நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டன.
யாழ்- கொழும்பு அதிசொகுசு பயணிகள் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னே பயணித்துக் கொண்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் பலத்த சேதங்களுக்குள்ளானது.
யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து கொடிகாமம் பகுதி நோக்கிப் பயணித்த உழவியந்திரமும் எதிரே வந்த பாரவூர்தியும் மோதிக் கொண்டது.
குறித்த விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதி சொகுசு பேருந்து உள்ளிட்ட நான்கு வாகனங்கள் மோதி விபத்து யாழில் சம்பவம் samugammedia சாரதிகளின் கவனயீனம் மற்றும் அதிவேகம் காரணமாக இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டன, அதிசொகுசு பயணிகள் பேருந்து பயணிகள் அதிஷ்டவசமாக தப்பித்துக்கொண்டனர்.ஏ9 பிரதான வீதியில் கொடிகாமம்,கொயிலாமனை சந்திக்கு அண்மையாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (20) இரவு 11:30 மணியளவில் ஒரே தளத்தில் நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டன.யாழ்- கொழும்பு அதிசொகுசு பயணிகள் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னே பயணித்துக் கொண்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதங்களுக்குள்ளானது.யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து கொடிகாமம் பகுதி நோக்கிப் பயணித்த உழவியந்திரமும் எதிரே வந்த பாரவூர்தியும் மோதிக் கொண்டது.குறித்த விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.