சிறிய முதலீடுகளுக்கு கணிசமான நிதி வருமானத்தை வங்கி வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி விளம்பரங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி (CBSL) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஏமாற்று விளம்பரங்கள், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் படங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்பதை இலங்கை மத்திய வங்கி எடுத்துக்காட்டியது.
டிஜிட்டல் தளங்களில் தோன்றும் இந்த பொய்யான விளம்பரங்கள், மத்திய வங்கி ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யும் நபர்களுக்கு பெரிய தொகையை செலுத்துவதாக தவறாகக் கூறுகின்றன.
எனவே, இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி பொது மக்களை எச்சரித்துள்ளது.
செயற்றை நுண்ணறிவை பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள்; மத்திய வங்கியின் எச்சரிக்கை சிறிய முதலீடுகளுக்கு கணிசமான நிதி வருமானத்தை வங்கி வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி விளம்பரங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி (CBSL) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஏமாற்று விளம்பரங்கள், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் படங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்பதை இலங்கை மத்திய வங்கி எடுத்துக்காட்டியது.டிஜிட்டல் தளங்களில் தோன்றும் இந்த பொய்யான விளம்பரங்கள், மத்திய வங்கி ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யும் நபர்களுக்கு பெரிய தொகையை செலுத்துவதாக தவறாகக் கூறுகின்றன.எனவே, இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி பொது மக்களை எச்சரித்துள்ளது.