• May 17 2024

ஈழத்தின் மூத்த சிவாச்சாரியார் நகுலேஸ்வரக் குருக்களின் இறுதி ஊர்வலம்! samugammedia

Tamil nila / Jul 16th 2023, 6:06 pm
image

Advertisement

ஈழத்தில்  மூத்த சிவாச்சாரியாரும் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரத்தின் ஆதீன கர்த்தாவுமாகிய நகுலேஸ்வரக் குருக்கள் நேற்றைய தினம் தனது 98 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.


அவரது இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் நகுலேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.


அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள்  மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி.ஊர்வலமானது 3.00 மணியளவில் பெருமளவானோரின் பங்கேற்புடன் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது.


இதேவேளை சிவாச்சாரியாரின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கல் செய்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.




ஈழத்தின் மூத்த சிவாச்சாரியார் நகுலேஸ்வரக் குருக்களின் இறுதி ஊர்வலம் samugammedia ஈழத்தில்  மூத்த சிவாச்சாரியாரும் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரத்தின் ஆதீன கர்த்தாவுமாகிய நகுலேஸ்வரக் குருக்கள் நேற்றைய தினம் தனது 98 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அவரது இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் நகுலேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள்  மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.இறுதி.ஊர்வலமானது 3.00 மணியளவில் பெருமளவானோரின் பங்கேற்புடன் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது.இதேவேளை சிவாச்சாரியாரின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கல் செய்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement