பெண் ஊடகவியலாளர் உட்பட பலர் பொலிசாரினால் தாக்கப்பட்டுள்ளதாககவும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் நேற்றிரவு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் இதன் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக தாம் நினைப்பதை சாதித்து விடமுடியும் என்ற நம்பிக்கையுடனே இவ்வாறான காட்டுமிரண்டித்தனத்தினை பொலிசார் கட்டவிழ்த்து விட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொலிசார் நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்த முயற்சித்திருந்ததாக செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
உள்ளுராட்சி தேர்தலை குறிவைத்து யாழிற்கான விஜயத்தை ஒரு தேர்தல் பிரச்சாரமாகவே பயன்படுத்தியிருந்ததாக செ.கஜேந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.
பெண் ஊடகவியலாளரை பொல்லால் தாக்கிய பொலிசார் - பிணையில் வெளியில் வந்த கஜேந்திரன் தகவல் பெண் ஊடகவியலாளர் உட்பட பலர் பொலிசாரினால் தாக்கப்பட்டுள்ளதாககவும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் நேற்றிரவு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் இதன் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக தாம் நினைப்பதை சாதித்து விடமுடியும் என்ற நம்பிக்கையுடனே இவ்வாறான காட்டுமிரண்டித்தனத்தினை பொலிசார் கட்டவிழ்த்து விட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பொலிசார் நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்த முயற்சித்திருந்ததாக செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.உள்ளுராட்சி தேர்தலை குறிவைத்து யாழிற்கான விஜயத்தை ஒரு தேர்தல் பிரச்சாரமாகவே பயன்படுத்தியிருந்ததாக செ.கஜேந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.