• May 17 2024

கிளிநொச்சியில் கனமழை...! வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்...! மக்கள் அவதி...! samugammedia

Sharmi / Nov 15th 2023, 10:24 am
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று பெய்துவரும் கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.

கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால்  கிளிநொச்சி திருவையாறு குளம் அண்டிய பிரதேசங்களில் கடும்மழை பெய்ததனால் குளத்தின் மேலதிக நீர் வெளியேறி செல்லும் பிரதேசங்களான பண்ணங்கண்டி, பரந்தன் மத்தி, சிவபுரம், உமையாள்புரம் மற்றும் வினாசியோடு பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.  

அதேவேளை,  கிளிநொச்சி திருவையாறு குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றத்தினால் உள்ளூர் வீதிகளில் மழை நீர் குறுக்கறுத்து பாய்ந்து ஓடுவதால் வீதியில் பயணிப்போர் கடும் சிரமத்திற்கு மத்தியில் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.


கிளிநொச்சியில் கனமழை. வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள். மக்கள் அவதி. samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று பெய்துவரும் கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால்  கிளிநொச்சி திருவையாறு குளம் அண்டிய பிரதேசங்களில் கடும்மழை பெய்ததனால் குளத்தின் மேலதிக நீர் வெளியேறி செல்லும் பிரதேசங்களான பண்ணங்கண்டி, பரந்தன் மத்தி, சிவபுரம், உமையாள்புரம் மற்றும் வினாசியோடு பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.  அதேவேளை,  கிளிநொச்சி திருவையாறு குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றத்தினால் உள்ளூர் வீதிகளில் மழை நீர் குறுக்கறுத்து பாய்ந்து ஓடுவதால் வீதியில் பயணிப்போர் கடும் சிரமத்திற்கு மத்தியில் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement